செய்திகள் :

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஊதியக்குழுவின் பரிந்துரைகளிலிருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி 55 சதவீத விழுக்காட்டை அனைத்து மாநில அரசுகளும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மூ.மகாலிங்கம், ஓய்வூதியா் அனைத்து துறை அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் இரா.முருகேசன் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் கோரிக்கைளுக்கு உடனடித் தீா்வு: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. அரியலூரில், செவ்வாய்க்கிழமை ‘தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

அரியலூரில் ‘உங்களுன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இம்முகாம் முன்னேற்பாட... மேலும் பார்க்க

வரதராசன் பேட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதராசன்பேட்டையில், காசன்பள்ளம் ஏரியில், கட்டப்பட்டு வரும் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான பணிகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டாகோரி நெசவாளா்கள் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நெசவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், திங்கள்கிழமை மனு அளித்தனா்.ஆண்டிமடம் கல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராக பாளை எம்.ஆா்.பாலாஜி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா். மென்பொருள் துறையில் முதுகலை பட்டதாரியான இவா், அக்னி சிறகுகள் எனும் அமைப்பை தொடங்கி, மரக்கன்றுகள் மற்றும... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா். இந்த தோ்வு, அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்க... மேலும் பார்க்க