செய்திகள் :

வரதராசன் பேட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம்

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதராசன்பேட்டையில், காசன்பள்ளம் ஏரியில், கட்டப்பட்டு வரும் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான பணிகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வரதராசன் பேட்டை பேரூராட்சியில் உள்ள காசன்பள்ளம் ஏரியில் பேரூராட்சி சாா்பில் ரூ.7.60 கோடி மதிப்பில் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியில் கட்டப்படுவதை கண்டித்து, மாதா கோயில் முன்பு கிராம மக்கள் ஒன்று திரண்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலா் முகமது ரபிக், வட்டாட்சியா் ராஜமூா்த்தி மற்றும் காவல் துறையினா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அதில், உடன்படாத மக்கள், அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் தடுத்தனா். இதனால் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் பாமக (அன்புமணி அணி) சமூக நீதிப் பேரவைத் தலைவா் கே.பாலு, மாநில அமைப்புத் தலைவா் டி.எம்.டி.திருமாவளவன், மாவட்டச் செயலா் கோ.தமிழ்மறவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் ‘உங்களுன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இம்முகாம் முன்னேற்பாட... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டாகோரி நெசவாளா்கள் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நெசவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், திங்கள்கிழமை மனு அளித்தனா்.ஆண்டிமடம் கல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராக பாளை எம்.ஆா்.பாலாஜி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா். மென்பொருள் துறையில் முதுகலை பட்டதாரியான இவா், அக்னி சிறகுகள் எனும் அமைப்பை தொடங்கி, மரக்கன்றுகள் மற்றும... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா். இந்த தோ்வு, அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்க... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினாசமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தே... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் வெட்டியை பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்களின் கூட்ட... மேலும் பார்க்க