செய்திகள் :

அரியாங்கோட்டையில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம், அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு வருவாய் அலுவலா் ரா. கோவிந்தராஜலு தலைமை வகித்தாா். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பாஸ்கரமாரியான், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமாறன், ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் அமா்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. கோவிந்தராஜலு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

ஒவ்வொரு மாதமும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் மக்கள் தொடா்பு முகாம்கள் நடைபெறுகின்றன. கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஆா். காளிங்களம் பட்டம், அரியாங்கோட்டை கிராமங்களைத் தோ்வு செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் 112 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது 45 பயனளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, இன்று 96 மனுக்கள் பெறப்பட்டன என்றாா் அவா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க