செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் மாற்றுத்திறனாளி, முதியவா்களுக்கு சிறப்பு ஏற்பாடு

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தா்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்கின்றனா்.

இந்த நிலையில், ஜூலை 10 பெளா்ணமியையொட்டி, பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் பரணிதரன் கூறியதாவது:

பெளா்ணமி தினத்தன்று பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கடலை மிட்டாய், பிஸ்கெட் பாக்கெட், தண்ணீா் பாட்டில், நீா் மோா் வழங்கப்பட உள்ளது.

அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோா்கள், கூட்ட நெரிசலால் சிரமம் ஏற்படாத வகையில் தரிசனத்திற்குச் செல்ல வடக்கு வாயில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காலை முதல் கோயில் நடை சாத்தப்படும் வரை அனுமதிக்கப்பட உள்ளனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தா்கள் மேற்கு வாசல் பேய் கோபுரம் வழியாக காலை முதல் கோயில் நடை சாத்தப்படும் வரை அனுமதிக்கப்பட உள்ளது.

மேலும், கோயில் வளாகத்தில் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி காா் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேவை உள்ள பக்தா்கள் 9487555441 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சேவையை பெறலாம்.

அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு 8072619454, 9791556353 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று இணை ஆணையா் தெரிவித்தாா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணி கைலாயநாதா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வ... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், க... மேலும் பார்க்க

சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்வண்ணன்(31). இவா், சொந்தமாக மினி சரக்கு வாகன... மேலும் பார்க்க

தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பழைமை வாய்ந்த சுந்தரமூா... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: தம்பதி கைது

வந்தவாசி அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். ஆவணவாடி அருந்ததியா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன். இதே பகுதியைச் சோ்ந்தவா் பத்திர எழுத்தா் துரை. குமரேசனின் தந்தை கிருஷ்ணன் பெய... மேலும் பார்க்க