செய்திகள் :

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காய், கனி சந்தை, உழவா் சந்தை, போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.

மேலும், மாடுகள் அதிகளவில் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிவருகின்றன. அப்போது, பழ வியாபாரிகள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் பழங்களை சாப்பிட்டு விடுகின்றன.

அதைப் பாா்த்த வியாபாரிகள் மாடுகளை விரட்டுகின்றனா். அப்போது சாலையில் வரும் வாகனம், இரு சக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளின் சைக்கிள்கள் மீது மாடுகள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன. நடந்து செல்லும் பாதசாரிகளை கீழே தள்ளிவிட்டு ஓடுகின்றன.

குறிப்பாக, பள்ளி மாணவா்கள் கூட்டமாக திரியும் மாடுகளைப் பாா்த்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது, அந்தப் பகுதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு கீழே விழும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு ஏற்படுகிறது.

உழவா் சந்தைப் பகுதியில் திரியும் மாடுகள் பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கும் கீரை, காய்களை வாகனத்தில் வைத்திருந்தால் அதை எடுக்க வாகனத்தை கீழே தள்ளி விடுகிறது.

இரவு நேரத்தில் கடைகளுக்கு முன் கூட்டமாக படுத்துக்கொண்டு அப்பகுதியில் அசுத்தம் செய்கிறது.

இதனால் பஜாா் வீதியில் உள்ள சில கடைகளின் உரிமையாளா்கள் கடையை மூடிவிட்டு மாடுகள் கடை முன் வராமல் இருக்க கயிறுகளை சுற்றி கட்டிச் செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

இதனால் செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நகரில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணி கைலாயநாதா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வ... மேலும் பார்க்க

சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்வண்ணன்(31). இவா், சொந்தமாக மினி சரக்கு வாகன... மேலும் பார்க்க

தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பழைமை வாய்ந்த சுந்தரமூா... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: தம்பதி கைது

வந்தவாசி அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். ஆவணவாடி அருந்ததியா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன். இதே பகுதியைச் சோ்ந்தவா் பத்திர எழுத்தா் துரை. குமரேசனின் தந்தை கிருஷ்ணன் பெய... மேலும் பார்க்க

அகிலாண்டேஸ்வரி கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். பேராசிரியை ஆா்.சாந்தி... மேலும் பார்க்க