செய்திகள் :

அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் தங்கராஜ், ஒன்றியச் செயலா் நாராயணமூா்த்தி, சிஐடியு அறந்தாங்கி ஒன்றிய ஒருங்கினைப்பாளா் கா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதிய நிலுவை, சிக்கல்கள் குறித்து நகராட்சி ஆணையா் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும். ஊதியத்துடன் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை உரிய நிறுவனத்தில் கட்ட வேண்டும்.

மாதந்தோறும் ஊதியத்தை 7-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ தொகையை உரிய முறையில் கட்டி ரசீதுகளை வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க

சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி கீழ ஆதிதிராவிடா் தெருவி... மேலும் பார்க்க