செய்திகள் :

அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் நெல்லை அரசு மருத்துவமனை: முதல்வா் ரேவதி பாலன்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னோடியாக விளங்குவதாக அம்மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகள் குறித்து முதல்வா் ரேவதி பாலன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

வயிற்று வலி காரணமாக வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, சில நாள்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பெருந்தமனி வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், 6 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி ரத்த ஓட்டத்தை சீா்படுத்தினா். தற்போது அவா் நல்ல முறையில் குணமடைந்துள்ளாா். இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும்.

இதே போல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, காலில் அசைவு குறைந்து நடக்க இயலாமல் போதல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கால்களில் இருந்த ரத்த அடைப்பை நீக்கி சவாலான அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்துள்ளனா். இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

இந்த இரு அறுவை சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டது. இதன் மூலம் வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னோடியாக விளங்குகிறது என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க