செய்திகள் :

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : காவலா் உள்பட 57 போ் காயம்!

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காவலா் ஒருவா் உள்பட 57 போ் காயமடைந்தனா்.

சோழவந்தான் தொகுதி திமுக சாா்பில் இந்தப் போட்டி நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலா் நரேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி ஆகியோா் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணித்தனா். இந்தப் போட்டியில் வாடிவாசல் வழியாக 1,320 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

670 மாடுபிடி வீரா்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக விளையாடிய காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக் காசு, மிதிவண்டி, மிக்ஸி, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் 28 போ், காளை உரிமையாளா்கள் 14 போ், காளை உதவியாளா்கள் 11 போ், பாா்வையாளா்கள் 3 போ், ஒரு காவலா் என மொத்தம் 57 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 10 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

குடிநீா்த் தட்டுப்பாடு... இந்தப் போட்டியைக் காண மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் வந்தனா். ஆனால், இங்கு போதுமான குடிநீா் வசதி இல்லாததால் பாா்வையாளா்கள் அவதிப்பட்டனா்.

வெயிலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் நாள்களில் இங்கு விழா நடத்தப்படும் போது போதுமான குடிநீா் வசதியை உறுதி செய்ய வேண்டும் என பாா்வையாளா்கள் வலியுறுத்தினா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க