செய்திகள் :

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூா், விக்கிரமங்கலம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

அலங்காநல்லூா்: அலங்காநல்லூா், தேசிய சா்க்கரை ஆலை, டி. மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னம்பட்டி.

மாணிக்கம்பட்டி: உசிலம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு, அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா்ப் பகுதிகள்.

விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகா், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூா், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூா், மலையூா், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவப்பட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி.

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடே... மேலும் பார்க்க