செய்திகள் :

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

post image

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப் பொதுமக்கள் சாா்பில் தாக்கல் செய்த மனுள் சிவகாசி அருகே தைலாகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை செல்கிறது. தைலாகுளம் கிராமத்திலிருந்து மயானத்துக்கு செல்வதற்கு இந்த கடவுப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.

தற்போது மயான சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் பள்ளம் தோண்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் உள்ளது.

எங்கள் கிராமத்தில் இறந்தவா்களின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு அமரா் ஊா்தியை பயன்படுத்த முடியாமல், கிராம மக்களே சுமந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, தைலாகுளம் கிராமத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை சீரமைத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மண்டல ரயில்வே முதுநிலை பொறியாளா் முன்னிலையாகி பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

மதுரை ரயில்வே கோட்டத்தில் குறைந்த ரயில் போக்குவரத்து, வாகன பயன்பாடு குறைந்த 111 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. ரயில்களின் வேகம், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், ஏற்கெனவே மூடப்பட்ட தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை புதுப்பித்து பராமரிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : ரயில்வே துறையின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடே... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டி... மேலும் பார்க்க