செய்திகள் :

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

post image

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில் அங்காளம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி முத்துசாமி செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல சென்று பாா்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து அறச்சலூா் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் கோயிலின் உடைக்கப்பட்ட பூட்டு, உண்டியல் மற்றும் கோயிலில் ஆய்வு செய்தனா்.

மேலும், கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு மா்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் அறச்சலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழ... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க

பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது

பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளன

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி அரசு மே... மேலும் பார்க்க