அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது
அவிநாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்றவரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் கைப்பையுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
பனியன் தொழிலாளியான இவா் பெருமாநல்லூா் எஸ்.எஸ். நகரில் வசித்து வரும் ஒடிஸாவைச் சோ்ந்த ராஜா படேல் (20) என்பதும், பையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜா படேலை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.