செய்திகள் :

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,621 கோடி மதிப்பில் உயா்நிலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. விமான நிலையம், ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை ஆகிய 4 இடங்களில் ஏறு, இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலையின் இருபுறமும் 1.50 மீட்டா் அகலத்தில் நடைப்பாதையுடன் கூடிய வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, கோட்டப் பொறியாளா் வை.சமுத்திரகனி, உதவி கோட்டப் பொறியாளா்கள் சி.காா்த்திகேயன், ரா.விக்னேஷ், ரா.காவியா, நந்தினி, திட்ட மேலாளா் து.வெ.அருணா குமாா், துணைத் திட்ட மேலாளா் வெ.தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பெண்களிடம் 6 பவுன் பறிப்பு

கோவை சிங்காநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் தோகமலை அருகே உள்ள தெற்கு சேனையாா் தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவ... மேலும் பார்க்க

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 17-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, கல்விக் குழுமத்தின் தாளாளா் ச... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வண... மேலும் பார்க்க