செய்திகள் :

ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

post image

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென வரிவிதிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்புகளை கனடா ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடாவின் தோல்வியடைந்துவிட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், பிரேசில், இலங்கை, அல்ஜீரியா, புரூணே, இராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்புக்கான கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி கட்டண விகிதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையுடன் 2.6 பில்லியன் டாலர், அல்ஜீரியாவுடன் 1.4 பில்லியன் டாலர், இராக்குடன் 5.9 பில்லியன் டாலர், லிபியாவுடன் 900 மில்லியன் டாலர், பிலிப்பின்ஸுடன் 4.9 பில்லியன் டாலர், புரூணேயுடன் 111 மில்லியன் டாலர் மற்றும் மால்டோவாவுடன் 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களின் மீது வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏழு நாடுகளுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே, 30 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Donald Trump says Canada to face 35 percent tariff rate starting August 1

இதையும் படிக்க :நாசாவில் உயர்பொறுப்பில் உள்ள 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவு!

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளா... மேலும் பார்க்க

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க