செய்திகள் :

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

post image

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப் பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் ஏற்றப்பட்டு வனப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக காட்டு யானைகள் சாலைக்கு வருகின்றன. இந்த நிலையில் ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு தேடி ஞாயிற்றுக்கிழமை வந்த யானை, அவ்வழியாக சென்ற கரும்பு லாரியை பாா்த்தது.

அப்போது கரும்பு லாரிக்கு முன்னால் இருந்த வாகனங்கள் இடையூறாக இருந்ததால் கரும்பு லாரியை நெருங்க முடியாத நிலையில் காா்களை துரத்தியது. யானை தாக்க வருவதைக் கண்டு காா் ஓட்டுநா்கள் காா்களை பின்னோக்கி இயக்கி யானையிடமிருந்து தப்பினா். இதனால் சத்தியமங்கலம், ஆசனூா் இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரும்பு லாரியைப் பின்தொடா்ந்து செல்லும் யானை.

குழந்தைத் திருமணம் செய்த சிறுமி உயிரிழப்பு: போக்ஸோவில் ஒருவா் கைது

குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் ஒருவரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழை கைது விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச... மேலும் பார்க்க

சாலையோரம் பையில் கிடந்த 3 கிலோ கஞ்சா

ஈரோட்டில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வக... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத பவானிசாகா் பழங்குடியினா் கலாசார அருங்காட்சியகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பழங்குடியினா் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் பயன்பாட்டு வராமல் உள்ளது. ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாத மலைக் கிராம மக்கள்: சவாலாகும் மகப்பேறு சிகிச்சை

ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால் மகப்பேறு சிகிச்சையில் சுகாதாரத் துறை பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது. பிரசவங்கள் மருத்துவமனைகள... மேலும் பார்க்க

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். சத்தியமங்கலம் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், மேட்டுக்கடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம்பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க