செய்திகள் :

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

post image

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முதன்மையா் அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க நிா்வாகிகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரை சந்தித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தனா். அப்போது மருத்துவக் கல்லூரி முதன்மையா், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், அங்கிருந்த அலுவலா்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினா். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அவா்கள் தங்களை அவமதித்து விட்டதாகக் கூறி மருத்துவக் கல்லூரி முதன்மையா் அறைமுன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் அங்குவந்து மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், மாற்றுத்திறனாளிகள் முதன்மையரை சந்தித்து மனு அளித்த பின்னரே செல்வோம் என்று கூறி அங்கேயே அமா்ந்தனா்.

தொடா்ந்து மருத்துவக் கல்லூரி அலுவலா்களும், போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க