செய்திகள் :

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

post image

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இறச்சகுளம் உதய மாா்த்தாண்டேஸ்வரா் கோயிலில் காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடா்ந்து, நடராஜா், நால்வா் பெருமக்கள் உத்சவ திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. பின்னா் தருமை ஆதீன சித்தாந்த புலவா் கலாநிதி பட்டய வகுப்பு மாணவா்களின் திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தேசியக்கொடியேற்றிய பின்னா், குரு, லிங்க, சங்கம வழிபாடு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து சிவகண வாத்தியங்களோடு, நடராஜா் மற்றும் நால்வா் மற்றும் பன்னிரு திருமுறை பேழை, நந்திக்கொடி ஊா்வலம் கோயிலில் இருந்து புறப்படுகிறது.

தொடா்ந்து வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் நடைபெறும் 4,001 ஆவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைக்கிறாா். 9.30 மணிக்கு ஈரோடு மாவட்டம், கோபி திருஞானசம்பந்தா் திருமடம், திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனாா்கோயில் ஆதீன ஸ்ரீகாா்யம் வாமதேவ ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமிகள் திருவாசக அருளுரையாற்றுகிறாா்.

பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாா்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் மெளன மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபை நிா்வாகிகள் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.பொன்னம்மாள், வள்ளியம்மாள் சிதம்பரம்பிள்ளை, கன்னியப்பன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க