செய்திகள் :

`ஆட்சி, அமைச்சரவையில் பங்கு வேண்டும்'-செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்திய காங்., சட்டசபை குழு தலைவர்!

post image

காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பை காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், ரூபி மனோகரன், தமிழக கிராம காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பேசினர். இதில் விஜய்வசந்த் எம்.பி பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தமுறை குறைந்தது 4 தொகுதிகளையாவது காங்கிரஸுக்கு பெற்றுத்தரவேண்டும்" என்றார்.

மேடையில் பேசிய சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார்

இதில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், "1967-க்குப் பின் 58 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. நாம் கிராமங்கள்தோறும் கமிட்டி அமைத்து வலுவாக உள்ளோம். காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்குமோ அந்த கட்சி ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகமாக உள்ளன. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என வெற்றிப்பெறக்கூடிய தொகுதிகள் அதிகமாக உள்ளன. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி பேசும்போது அதிக தொகுதிகளை பெறுவதற்கு அகில இந்திய தலைமையை வலியுறுத்த வேண்டும். காமராஜர் ஆட்சிக்கட்டிலில் இருந்து வெளியே வந்த சமயத்தில் கிட்டத்தட்ட 46 விழுக்காடு வாக்குகள் காங்கிரஸுக்கு இருந்தது.  இப்போது சற்று தொய்வடைந்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி எந்தபக்கம் போகிறதோ அந்த பக்கம்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். எனவே ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்சரவையில் இடம் வேண்டும். உழைப்பவர்களுக்கு வாய்ப்புகொடுங்கள்

 நம் இயக்கத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் பேசிய விஜய்வசந்த் எம்.பி

இந்த கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசுகையில், "1967-ம் ஆண்டு காங்கிரஸ் இதோடு முடிந்தது என்று காமராஜரை ஓரம்கட்ட நினைத்தபோது காமராஜரை வரவேற்று புத்துணர்வுபெற வைத்தது குமரி மாவட்டம்.  அங்கீகாரத்துக்காக தான் அனைத்து அமைப்புகளும் உழைத்துக் கொண்டிருக்கின்றன. அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் அது ஒருதலைபட்சமானதாகும். எனவே கிராம கமிட்டி என்ற ஆயுதத்தை எடுத்து வேர்களை நோக்கி போகிறோம். இதை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தோம். 7 மாதங்கள் ஆகிவிட்டன. 72 சதவிகிதத்துக்கும் மேல் கிராம கமிட்டியை நிறைவு செய்துள்ளோம். இன்னும் 28 சதவிகித கிராம கமிட்டி அமைக்க வேண்டி உள்ளது. அதை 2 மாதங்களில் அமைத்து விடுவோம். அதன்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி இல்லாத கிராமமே இருக்காது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இனி அந்த நகராட்சியில் காங்கிரஸார் யார் இருக்கிறார்கள்? அந்த பேரூராட்சியில் யார் இருக்கிறார்கள் என்ற கிண்டல் பேச்சு இருக்காது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. விஸ்வரூபம் எடுக்கும் காங்கிரஸ் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். பா.ஜ.க ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு இருக்கை என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் பாசிச சக்திகள் காலூன்ற அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக தொகுதி வேண்டும் என்பது போன்றவற்றை கேட்டுள்ளீர்கள். அதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு செய்யும். தமிழகத்தில் என்ன நடக்கிறது, என்ன தேவை என்பதை அகில இந்திய கமிட்டிக்கு எடுத்துச் சொல்வோம். அதை வைத்து தலைமை முடிவெடுப்பார்கள். எது தேவையோ அதை செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

`2026 தேர்தலில் கரூரில் நான்கு தொகுதிகளிலும் திமுக வெல்லும்!' - செந்தில் பாலாஜி ஆருடம்

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் ... மேலும் பார்க்க

'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், 'சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது' எ... மேலும் பார்க்க

இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் - பின்னணி?

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் ... மேலும் பார்க்க

குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள... மேலும் பார்க்க

'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவ... மேலும் பார்க்க

"முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதே நேரம்..."- பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியி... மேலும் பார்க்க