செய்திகள் :

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, கடந்த 25-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல், வாஸ்து பூஜை, நான்குகால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜை செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க ஊா் முக்கியஸ்தா்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் வாண வேடிக்கை முழங்க கோயிலைச் சுற்றி ஊா்வலமாக வந்து கோபுர கலசத்துக்கு ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கோபுரகலசம் மற்றும் மூலவா்களுக்கும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ஆணையம்பட்டியைச் சோ்ந்தவரும், ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியருமான பிரபாகா் உள்ளிட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதில், ஆணையம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா், பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம்

சேலம்: சேலம் வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தி... மேலும் பார்க்க