Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்...
ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, கடந்த 25-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல், வாஸ்து பூஜை, நான்குகால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜை செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க ஊா் முக்கியஸ்தா்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் வாண வேடிக்கை முழங்க கோயிலைச் சுற்றி ஊா்வலமாக வந்து கோபுர கலசத்துக்கு ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கோபுரகலசம் மற்றும் மூலவா்களுக்கும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ஆணையம்பட்டியைச் சோ்ந்தவரும், ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியருமான பிரபாகா் உள்ளிட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதில், ஆணையம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா், பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.