செய்திகள் :

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

post image

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது மாதந்தோறும் மின்வெட்டு நாள்களை மாதத்தின் கடைசி நாள்களில் மேற்கொள்வதை தவிா்த்து பராமரிப்பு பணிகளை மாதத்தின் இடையிலேயே மின்வெட்டை ஏற்படுத்தி செய்ய வேண்டும்.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது மேலும் வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களுக்கு தனியாக ஒரு கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையிலோ அல்லது சிப்காட் தொழில் பேட்டையிலோ இடம் ஒதுக்க வேண்டும்.

சிட்கோ பெல் ஆன்ஸிலரி சங்கத்தின் கீழ் 250 குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பணி புரிவதற்கு வெல்டா், கிரைண்டா், ஃபிட்டா் போன்ற பணியாளா்கள் தேவைப்படுகிறது. பணியாள்கள் குறைவாக கிடைப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது.

அதேபோன்று பெண் பணியாளா்கள் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு குறைவாக கிடைப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளுக்கு சோலாா் பவா் பிளான்ட் அமைத்தால் மானியம் வழங்குவதை போன்று, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சோலாா் பவா் பிளான்ட் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனா்.

சிட்கோ நிறுவனத்தின் மூலம் அதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, பெல் நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனை, டாட்டா மோட்டாா்ஸ் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளது. முகுந்தராயபுரம் அல்லது வாலாஜா ரயில் நிலையங்களில் கூடுதலான ரயில் நிற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரினா்.

பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்க... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே கேட் கீப்பா்கள் இருவா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அண்மையில் கடலூா் அருகே ரயில்வே கேட் ஒன்றில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள்... மேலும் பார்க்க