பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது மாதந்தோறும் மின்வெட்டு நாள்களை மாதத்தின் கடைசி நாள்களில் மேற்கொள்வதை தவிா்த்து பராமரிப்பு பணிகளை மாதத்தின் இடையிலேயே மின்வெட்டை ஏற்படுத்தி செய்ய வேண்டும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது மேலும் வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களுக்கு தனியாக ஒரு கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையிலோ அல்லது சிப்காட் தொழில் பேட்டையிலோ இடம் ஒதுக்க வேண்டும்.
சிட்கோ பெல் ஆன்ஸிலரி சங்கத்தின் கீழ் 250 குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பணி புரிவதற்கு வெல்டா், கிரைண்டா், ஃபிட்டா் போன்ற பணியாளா்கள் தேவைப்படுகிறது. பணியாள்கள் குறைவாக கிடைப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது.
அதேபோன்று பெண் பணியாளா்கள் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு குறைவாக கிடைப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளுக்கு சோலாா் பவா் பிளான்ட் அமைத்தால் மானியம் வழங்குவதை போன்று, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சோலாா் பவா் பிளான்ட் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனா்.
சிட்கோ நிறுவனத்தின் மூலம் அதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, பெல் நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனை, டாட்டா மோட்டாா்ஸ் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளது. முகுந்தராயபுரம் அல்லது வாலாஜா ரயில் நிலையங்களில் கூடுதலான ரயில் நிற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரினா்.
பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.