செய்திகள் :

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோருக்கு கல்வி சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான உறுப்பினா் பதிவு ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியங்களிலும் நலவாரியத்திற்கான உறுப்பினா் பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவையா் சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவை பெறப்படுகின்றன. கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய உறுப்பினா் சோ்க்கை ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலத் துறையின் ‘சகி’ பிரிவு ஊழியா்கள் பெண்களிடம் ஆவணங்களை பெற்றனா். இதுவரை, எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலா்மலை, கொல்லிமலை, மல்லமுத்திரம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, நாமக்கல் உள்ளிட்ட ஒன்றியங்களில் முடிவடைந்துள்ளது. பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூா் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறும் உறுப்பினா் பதிவு முகாம்களுடன் 21-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நலவாரிய பதிவு முகாமில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

என்கே-13-வாரியம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய வெள்ளிக்கிழமை ஆவணங்களை சமா்ப்பித்த பெண்கள்.

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க