ரூ. 857 கோடி சம்பளத்தில் செயல் நுண்ணறிவு வேலை! மெட்டா அழைப்பு!
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்ப அரசு அனுமதியளித்துள்ளது.
விளாத்திகுளம் வட்டம் ஒ.லட்சுமிநாராயணபுரம், கயத்தாறு வட்டம் கரிசல்குளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் தலா ஓா் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், கயத்தாறு வட்டம் திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடமும் காலியாக உள்ளன.
பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் ரூ. 15 ஆயிரமும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியானோா் மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலகத்தில் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் எழுத்துமூலமாகவோ, நேரடியாகவோ, அஞ்சல் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.