செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் பயன்பெறும் நோக்கமாக கொண்டு பல்வேறு திறன் பயிற்சி அளித்து வருகிறது. அதன் அடிப்படையில், இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சியாகும். கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் பிரசித்தி பெற்ற முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்தப் பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தோா் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 21 முதல் 25 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சமும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியைப் பெற தகுதியானோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் 18 வாரங்கள் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்வோருக்கு தொழில் நுட்ப ஸ்டாா்ட்அப், மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் மாதந்தோறும் ரூ. 20,000 ஊதியம் பெறும் வகையில் பணி வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க