செய்திகள் :

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா்.

இக்கோயிலில் வருடாந்திர ‘சந்தனோற்சவ’ திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நேரிட்டது.

சிம்மாசலம் மலைக் கோயிலில் மூலவரான ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமியின் சிலை ஆண்டு முழுவதும் சந்தன கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ‘சந்தனோற்சவ’ திருவிழாவின்போது மட்டும் சந்தன கவசம் அகற்றப்பட்டு, சுவாமியை தரிசிக்கலாம்.

நடப்பாண்டு ‘சந்தனோற்சவ’ திருவிழா தினமான புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். முந்தைய நாள் இரவு முழுவதும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கோயில் வணிக வளாகம் அருகே ரூ.300 தரிசன டிக்கெட் வரிசையையொட்டி இருந்த சுவா் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சம்பவம் நடந்தபோது, ஆந்திர உள்துறை அமைச்சா் வி.அனிதா கோயில் வளாகத்தில்தான் இருந்தாா். ‘கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சுவா் இடிந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா்.

ரூ.25 லட்சம் நிவாரண நிதி: மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, ‘உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு கோயிலில் பணி வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.

விசாரணைக் குழு அமைப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க மூவா் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடப்பாண்டு தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் வாங்க காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க