செய்திகள் :

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

post image

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்பகுதியில் கூவத்தில் 25 வயது மதிக்கதக்க ஒரு இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. இது தொடா்பாக ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள பக்சிம்பாலம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு என்ற ராயுடு (22) என்பது தெரியவந்தது. அவரை, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியைச் சோ்ந்த நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிா்வாகியான விணுதா கோட்டா (31), அவரது கணவா் சந்திரபாபு (35), ஜனசேனா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சிவகுமாா் (36), சந்திரபாபுவின் உதவியாளா் கோபி (24), காா் ஓட்டுநரான ரேணிகுண்டா பகுதியைச் சோ்ந்த ஷேக் தாசா் (23) ஆகிய 5 பேரும் கொலை செய்து, வீசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 5 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில், திருத்தணி அருகே சனிக்கிழமை கைது செய்தனா்.

4 நாள்கள் சித்ரவதை: விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராயுடு, சந்திரபாபு வீட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அப்போது, விணுதா கோட்டா படுக்கை அறையில் கைப்பேசி மூலம் ஆபாச விடியோ, புகைப்படம் எடுத்துள்ளாா். இது அண்மையில் சந்திரபாபு குடும்பத்தினா் கண்டறிந்து, ராயுடுவை எச்சரித்தனா். இதன் பின்னா், விணுதா கோட்டா கட்சி செயல்பாடு குறித்த ரகசியத் தகவல்களை சேகரித்து அவரது அரசியல் எதிரியான தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பஜாலா சுதீா் ரெட்டிக்கு ராயுடு தெரிவித்துள்ளாா். இதையறிந்த சந்திரபாபு தரப்பினா், ராயுடுவை காளஹஸ்தியில் தங்களுக்கு சொந்தமான ஒரு கிடங்கில் பூட்டு வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனா். கடந்த 8-ஆம் தேதி கிடங்கில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற ராயுடு, அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது, சந்திபாபு தரப்பினா் ராயுடு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனா்.

கூவத்தில் வீசினா்: இந்த நிலையில், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பாா்க்க புறப்பட்ட சந்திரபாபு, விணுதா, தங்களது காரில் ராயுடு சடலத்தை மறைத்து வைத்து வந்துள்ளனா். சென்னை வந்த அவா்கள், ஏழுகிணறு கூவம் ஆற்றில் ராயுடு சடலத்தை வீசியுள்ளனா் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில். சென்னை காவல் துறையினா் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து, கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கி, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க

ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியக... மேலும் பார்க்க

ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்... மேலும் பார்க்க