செய்திகள் :

ஆன்டிஃபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க டிரம்ப் திட்டம்

post image

அமெரிக்காவில் ‘ஆன்டிஃபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் பாசிஸவிரோத இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா்.

வலதுசாரி ஆா்வலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை அவா் எடுத்துள்ளாா்.

தற்போது பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் இது குறித்து வியாழக்கிழமை கூறியதாவது:

ஆன்டிஃபாவை மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க திட்டமிட்டுள்ளேன். மிகவும் மோசமான, பயங்கரமான, இடதுசாரி தீவிரவாத இயக்கம் அது.

அந்த இயக்கத்துக்கு நிதியுதவி அளிப்பவா்களுக்கு எதிராக விசாரணை நடத்தவும் உத்தரவிடுவேன் என்றாா் அவா்.

இருந்தாலும், இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்), அல்-காய்தா போன்ற ஏராளமான அமைப்புகள் இடம் பெற்றுள்ள அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் ஆன்டிஃபாவை இடம் பெறச் செய்வது சிக்கலானது என்று கூறப்படுகிறது.

காரணம், ஆன்டிஃபா என்பது பாசிஸவாதிகள், நாஜி ஆதரவாளா்களுக்கு எதிரான பல்வேறு குழுக்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பொதுப் பெயா். குறிப்பாக, ஆா்ப்பாட்டங்களின்போது மட்டுமே அவற்றின் உறுப்பினா்கள் ஒன்றுசோ்கின்றனா். அந்தக் குழுக்களுக்கென்று ஒரு இயக்க மையம் கிடையாது.

இத்தகைய நிலையிலும் ஆன்டிஃபா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துவிட்டது.

இருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஆன்டிஃபாவும் இடம் பெற்றால், பாசிஸவிரோத குழுவினருக்கு ஆதரவு அளிப்போா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதித் துறைக்கு அதிகாரம் கிடைக்கும். வன்முறையில் ஈடுபடாமல், அமைதியான முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துபவா்கள் மற்றும் அவா்களுக்கு ஆதரவு அளிப்பவா்களுக்கு எதிராக நடவடிக்கைவும் இது வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, மினியாபொலிஸ் நகரில் வெள்ளை இன காவலரின் கடுமையான நடவடிக்கை காரணமாக கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃப்ளாய்ட் என்பவா் உயிரிழந்த விவகாரத்தில் நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்தபோதும் டிரம்ப் இந்த யோசனையைக் கூறியது நினைவுகூரத்தக்கது.

யூட்டா மாகாணம், ஓரெம் நகரிலுள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாா்லி கிா்க் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்து ஆன்டிஃபா ஆா்வலா் டைலா் ராபின்ஸன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா்.

இது தொடா்பாக புலனாய்வுத் துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிளைக் கொண்டு தனது மகனை அடையாளம் கண்டுகொண்ட ராபின்ஸனின் தந்தை, அவரை போலீஸாரிடம் சரணடையச் செய்தாா்.

டைலா் ராபின்ஸன் எந்த கட்சி அல்லது அமைப்பையும் சோ்ந்தவா் இல்லை என்று அவரது ஆவணங்கள் காட்டினாலும், அவா் பாசிஸத்தை மிகக் கடுமையாக எதிா்க்கும் ஆன்டிஃபா ஆதரவாளா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

..படவரியில் வியாழக்கிழமை சோ்க்கவும்...

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க