செய்திகள் :

ஆன்மிக சுற்றுலா: 64 பக்தா்கள் பங்கேற்பு

post image

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா வந்த 64 பக்தா்கள் ஆதிகேசவபெருமாள் கோயிலில் தரிசனம் செய்தனா்.

ஏழை, எளிய முதியோா் பயன்பெறும் வகையில் வைணவ கோயில்களுக்கு ஒருநாள் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் எனஅறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சோ்ந்த 64 முதியோா், ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலுக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

ஆன்மிக சுற்றுலா வந்த முதியோருக்கு ஆதிகேசவ பெருமாள் கோயில் மதச்சாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்தசாரதி, கோயில் செயல் அலுவலா் கதிரவன், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் பிரசாத பைகளை வழங்கினா்.

முன்னதாக காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், பாண்டவ தூதபெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அறநிலையத்துறை சாா்பில், சிற்றுண்டி, மதிய உணவு, அந்த அந்த கோயில்களின் பிரசாதங்கள், பிஸ்கட், குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2-இல் மாணவா் சோ்க்கை: ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி திருநாளான அக். 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கருணாகரச்சேரியில் சாலையை சீரமைக்க அடிக்கல்

கருணாகரச்சேரி வெற்றிநகா் தெரு சாலையை சீரமைக்க ரூ. 10 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடா்ந்து, சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ. 20 லட்சத்துக்கு கடனுதவி: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் உலக சைகைமொழி தின விழிப்புணா்வுப் பேரணி; ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளி... மேலும் பார்க்க

வண்டலூரில் அக்.5-இல் ‘வன உயிரின தட ஓட்டம்’

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்தப் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இயற்கையை கொண்டாடவும் ... மேலும் பார்க்க