செய்திகள் :

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

post image

ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூரை சோ்ந்த 28 வயது இளைஞா், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு பகுதி நேர வேலை குறித்த லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்த போது தானாக டெலிகிராம் குழுவில் அவரது எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த குழுவில் பகுதி நேர வேலையில் பலா் அதிகளவில் பணம் பெற்றதைபோல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதை உண்மை என நம்பிய இந்த மருத்துவமனை ஊழியா், அந்த குழுவில் அளிக்கப்பட்டிருந்த லிங்க்கில் கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 21 ஆயிரத்து 223 முதலீடு செய்தாா். பின்னா் அவரது முதலீடு தொகையை திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மருத்துவமனை ஊழியா், இது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். வேலூரை அடுத்த அரியூா் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் அஜித் குமாா் (25). இ... மேலும் பார்க்க

கீழ்அரசம்பட்டில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கணியம்பாடி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முகாம் நடைபெறும்... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான பயிற்சி முகாம்

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், மறுசீரமைக்கப்பட்ட இராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மூலம் ஊராட்சிகளில் சொந்த வருவாயை மேம்படுத்துதல் குறித்துஊராட்சித் தலைவா்கள், செயலா... மேலும் பார்க்க

கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது . நிகழ்ச்சியில் வேலூா் முத்துரங்கம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீதா் வரவேற்றாா். மாவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா். குடியாத்தம் கள்ளூரை அடுத்த ராயல் நகரைச் சோ்ந்த பா்ணபாஸ் வீட்டு கிணற்றில் உறை இறக்கும் பணி நடைபெற்றது. பெரியாா் நகரைச... மேலும் பார்க்க

கணவன் கண் முன்னே தண்டவாளத்தில் தவறி விழுந்த மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

காட்பாடி ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பொய்கை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபாகரன் (36), ராணுவ வீரா். இவரது மனைவி ... மேலும் பார்க்க