செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

post image

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கமளித்த நிலையில் முக்கிய நாடுகளுக்கு நேரடியாகச் சென்றும் விளக்கமளிக்க உள்ளது.

அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுவின் தலைவர்களை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 முதல் 8 எம்.பி.க்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வருகிற மே 23 முதல் 10 நாள் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, இந்த குழு அமைக்கும்பொருட்டு 4 எம்.பி.க்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார்.

ஆனால், மத்திய அரசு அறிவித்த 7 குழுத் தலைவர்களின் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெற்றுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமளிக்கும் குழுவுக்கு வழிகாட்டியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கு சசி தரூர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தேச நலன் என்று வரும்போது என்னுடைய சேவை தேவைப்படும்போது கண்டிப்பாக அதைச் சிறப்பாகச் செய்வேன்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் சசி தரூருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசைப் பாராட்டி பேசி வந்தார். இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், தான் மத்திய அரசுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ செய்தித் தொடர்பாளர் இல்லை என்றும் நாட்டிற்காகப் பேசுவதாகவும் கூறிய சசி தரூர், இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா். மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லி... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க