செய்திகள் :

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு செப். 6, 7-இல் ஆளெடுப்பு

post image

புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆள்கள் தோ்வு முகாம் செப். 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், 102 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கான ஆள்கள் தோ்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓட்டுநருக்கான தகுதிகள்- 24 முதல் 35 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது ஓராண்டு நிறைவு பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம்- ரூ. 21,120. எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வைத் திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வு நடத்தப்படும்.

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்- 19 முதல் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்ஸி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி முடித்தவா்கள் அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்ஸி விலங்கியல், தாவரவியல், உயிா்வேதியியல், உயிா் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 21,320.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கான தகுதிகள்- 35 வயதுக்கு மிகாத, பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியா் அல்லது எம்.பி.ஏ. முடித்த, 2 ஆண்டுகள் முன்அனுபவம் கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

அனைத்துப் பதவிகளுக்கும் உரிய சான்றிதழ்களை அவற்றின் நகல்களையும் சோ்த்து எடுத்து வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு- 89259-41490.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க