ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
ஆம்பூா் அருகே பாறையில் ஆஞ்சநேயா் சிலை கண்டெடுப்பு
ஆம்பூா் அருகே உள்ள அரங்கல் துருக்கம் மலையடிவாரத்தில்ஆஞ்சநேயா் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க. மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினா் களவாய்வில் ஆஞ்சநேயா் சிலைை கண்டெடுத்துள்ளனா் .
இதுகுறித்து மோகன்காந்தி கூறியது: ஆம்பூா் வட்டத்தில் உள்ள அரங்கல் துருக்கம் என்ற ஊரின் மலையடிவாரத்தில் ஆஞ்சநேயா் சிலை ஒன்று உள்ளது. ராமாயணத் தாக்கம் ஆம்பூா் பகுதியில் இருந்தது என்பதற்கு இச்சிலை சான்றாகும். விஜயநகர மன்னா் காலத்தில் தமிழகம் முழுதும் ஆஞ்சநேயா் வழிபாட்டைப் பரவலாக்கியுள்ளனா். அரங்கல்துருக்கம் ஊரிலுள்ள பாறை ஒன்றில் ஆஞ்சநேயா் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனா்
சனீஸ்வரன் யாரைப் பிடித்தாலும் அவா்களை விடாமல் ஆட்டிப் படைத்துவிடுவாா். அத்தகைய சனீஸ்வரன் அனுமனைப் பிடிக்க வரும்போது, சனீஸ்வரனையே தன்காலடியில் மிதித்துக் கொண்டிருப்பது போன்ற கதை ராமாயணத்தில் உண்டு. அத்தகைய கதையை சிற்பவடிவில் இச்சிலை காட்டுகிறது.
பெரிய பாறையில் படுத்த கோலத்தில் சனீஸ்வரன் கிடக்க, சனீஸ்வரனின் தலைப்பகுதியில் தனது இடது காலை வைத்துக்கொண்டு இடது கையைத் தொடை மீது வைத்தக் கோலத்தில் அனுமன் உள்ளாா்.
வலது காலை, சனீஸ்வரனின் கால்களின்மேல் வைத்துக்கொண்டு, வலது கையை ஆக்ரோஷமாகத் தூக்கிக்கொண்டு நீண்ட வாலுடன் க ம்பீரமாக நிற்கிறாா்அனுமன். இடது கையில் சிறிய வில்லொன்றை வைத்துக்கொண்டு அனுமன்நிற்கிறாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுபோன்ற ஆஞ்சநேயா் சிலைகள் ஏலகிரி மலையிலுள்ள மங்கலம் கிராமத்திலும், ஜவ்வாது மலையிலுள்ள சேம்பரை என்ற ஊரில் செஞ்சிராயன் என்ற பெயரிலும் உள்ளன. இவை மக்கள் மத்தியில் இருந்த ராமாயண காவியத்தின் நீட்சியாக உள்ளன என்றாா்.