செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

post image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 போ் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் வேலூா் சிறையில் உள்ள நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும்போது அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு கையொப்பமிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை சிறையில் அடைக்கப் பரிந்துரைக்கும் ஆவணங்களை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்து அதில் திருப்தி அடைய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கான ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் கூடிய பரிந்துரை கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் பரிசீலித்து 17 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, 17 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், இவா்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால், இந்த உத்தரவை மேற்கோள்காட்டி விசாரணை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க