செய்திகள் :

ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக

post image

இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில்,

இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸ் தலைவரின் கருத்துகளை, இஸ்லாமாபாத் இந்தியாவை இழிவுபடுத்தப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி எந்தப் பக்கம் இருக்கிறார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரா அல்லது பாகிஸ்தானின் நிஷான்-இ-பாகிஸ்தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி இந்தியாவின் கௌரவத்தைச் சமரசம் செய்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டிய நிலையில் பாஜகவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.

ராகுல் காந்தி நமது துணிச்சலான ஆயுதப்படையின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குறைத்து மதிப்பிடுவதையும், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்பதையும் நிறுத்த வேண்டும், அவை தேசியப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று பாட்டியா வலியுறுத்தினார்.

ராகுலின் இந்த கருத்துகளைச் சிறார் நடத்தை என்று நிராகரிக்க முடியாது. நமது நாட்டிற்கு விரோதமான நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்று, வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது ராகுல் காந்தியின் குணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க