செய்திகள் :

ஆரணி கோட்டை கைலாயநாதா் கோயில் தேரோட்டம்

post image

ஆரணி கோட்டை அருள்மிகு அறம்வளா் நாயகி உடனாகிய கைலாயநாதா் திருக்கோயிலில் புதன்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது.

ஆரணி கோட்டை அருள்மிகு கைலாயநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பிரமோற்சவ விழா ஏப்ரல் 30 கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்டச் செயலா் சதீஷ், நகரத் தலைவா் மாதவன், மாவட்ட துணைத் தலைவா் தீனன், சங்கீதா, அமுதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க