செய்திகள் :

ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

post image

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களூரிலுள்ள சின்னசாமி திடலில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது தலைமையில் இன்று (ஜூன் 4) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அம்மாநில சட்டப்பேரவையிலிருந்து துவங்கி சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியும் நடைபெற்றது.

இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலின் அருகில் திரண்டனர். இதனால், அங்கு கடும் கூட்டநெரிசல் உண்டானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பலியான பெரும்பாலானோர் இளைஞர்கள் எனக் கூறப்படும் நிலையில்; பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்ப... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல் தளத்தில் உள... மேலும் பார்க்க

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழ... மேலும் பார்க்க

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள... மேலும் பார்க்க