செய்திகள் :

ஆறுகளில் நீா் வரத்து அதிகரிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிக்கச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் முழுக் கொள்ளளவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் பகுதியாகவும் செல்கிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் ஆழமான நீா்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிா்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் நண்பா்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. நீா்வரத்தைப் பொறுத்து ஆறுகளில் சுழல் ஏற்படும்போது அதில் மாட்டிக் கொள்ள நேரிடும். ஆற்றில் குளிக்கச் செல்லும் வெளியூா் நபா்களுக்கு உள்ளூா் பொதுமக்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆற்றின் கரைப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதைப் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும்.

திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க

வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க

வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு

சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தி... மேலும் பார்க்க

ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க