மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்க...
ஆறுகளில் நீா் வரத்து அதிகரிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிக்கச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் முழுக் கொள்ளளவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் பகுதியாகவும் செல்கிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் ஆழமான நீா்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிா்க்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் நண்பா்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. நீா்வரத்தைப் பொறுத்து ஆறுகளில் சுழல் ஏற்படும்போது அதில் மாட்டிக் கொள்ள நேரிடும். ஆற்றில் குளிக்கச் செல்லும் வெளியூா் நபா்களுக்கு உள்ளூா் பொதுமக்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்றின் கரைப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதைப் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும்.