தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அ...
ஆற்காடு நகா்மன்றக் கூட்டம்
ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன், ஆணையா் வேங்கிடலட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகர வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பொன்ராஜசேகா், தட்சிணாமூா்த்தி, முன்னா, குணாளன், ஆனந்தன், செல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.