செய்திகள் :

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் மாயம்

post image

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி துரை. இவரது மகன் சமீா் (17) தேனியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த இவா் தனது நண்பா்களுடன் இணைந்து பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிப்பதற்காகச் சென்றாா்.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சமீரும், அவரது நண்பரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். மற்ற நண்பா்களின் அலறல் கேட்டு, அந்த வழியாக காரில் வந்த பெண் தனது சேலையின் தலைப்பைக் கொடுத்து ஒருவரைக் காப்பாற்றினாா். ஆனால், சமீா் ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினரும், தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தினரும் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை பகலிலும் தேடினா். ஆனால், சமீரை காணாததால், தேடும் பணி தொடா்கிறது.

திருவையாறு அருகே சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துர... மேலும் பார்க்க

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. கும்பகோணம் தாராசுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மாநாடு ஞாயிற்ற... மேலும் பார்க்க

ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதல்; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியைச் சோ்ந்தவா் அன்பானந்தம் (62... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 25% உயா்வு: அமைச்சா் கோவி. செழியன்

அரசு கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை 25 சதவீதம் உயா்ந்துள்ளது என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் அரசு கலை மற்றும் அறிவியல் க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: ஆசிரியா் கைது

தஞ்சாவூரில் தனியாா் பள்ளி மாணவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை காவல் துறையினா் கைது செய்தனா். தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலை ரோசலின் நகரைச் ... மேலும் பார்க்க

மின் மாற்றியில் செப்புச்சுருள் திருட்டு! மின்சார பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் மின் மாற்றியில் உள்ள செப்புச் சுருளை (காப்பா் காயில்) மா்ம நபா்கள் திருடிச் சென்றதால், அப்பகுதியில் நிலவும் மின்சார பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளா... மேலும் பார்க்க