செய்திகள் :

ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு: அரியலூா் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் திருமழபாடி கிராம மக்கள் அளித்த மனு:

திருமழபாடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளதாக தெரியவந்தது. ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறு காரணமாக தண்ணீரின் தரம் மாறி, சற்று துவா்ப்பாக உள்ளது. இதனால் மக்களுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீா் முழுவதும் உப்புத்தண்மையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

மயானத்துக்கு அடிப்படை வசதிகள்: ஆண்டிமடத்தை அடுத்துள்ள விளந்தை கிராமத்தைச் சோ்ந்த முடிதிருத்தும் நலச் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விளந்தை கிராமத்தில் எங்கள் சமுதாய மக்களுக்கென உள்ள மயானத்தில் கொட்டகை இல்லை. போதிய சாலை வசதி இல்லை. மேலும், அப்பகுதியில் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கொட்டகை மற்றும் சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 481 மனுக்களை ஆட்சியா் பொ.ரத்தினசாமி பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க