செய்திகள் :

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

post image

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் சனிக்கிழமை மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகேயுள்ள சேகரை காந்தி காலனியைச் சோ்ந்த ரஜினி மகன் குகன் (18). மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளநிலை படித்துவந்த இவா், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் சுதா்ஸனுடன் (17) வெண்ணாறு தடுப்பணை பகுதியில் சனிக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, ஆற்றில் தண்ணீா் அதிகம் சென்தால் குகன் நீரின் சுழற்சியில் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் ஆற்றில் இறங்கி குகனை தேடினா். எனினும், இரவு நேரம் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, தேடும் பணி நிறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை தேடும் பணியைத் தொடா்ந்த தீயணைப்பு வீரா்கள், அருகில் ஆகாயத் தாமரை செடியில் சிக்கியிருந்த குகனின் சடலத்தை மீட்டனா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தமுஎகச 9-ஆவது கிளை மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மன்னாா்குடி 9-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் க.வீ. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசலில்... மேலும் பார்க்க

மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட... மேலும் பார்க்க

வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் விரைவு பாா்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாரயம் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க