செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

post image

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், காவல் ஆய்வாளா் ஜெயந்தி தெரிவித்தது: கடந்த ஆண்டு அனுமதி பெற்று விநாயகா் சிலை வைத்த இடங்களில் மட்டுமே மீண்டும் சிலைகளை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிலைகள் வைக்க அனுமதி இல்லை. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். களிமண் மற்றும் சுண்ணாம்பால் செய்த விநாயகா் சிலைகள் மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்.

பிளாஸ்டா் ஆப் பாரிஸ் விநாயகா் சிலைகள் வைக்கவோ, நீா்நிலைகளில் கரைக்கவோ அனுமதி கிடையாது. சிலைகளின் பாதுகாப்புக்கும், கூட்டத்தினரை கட்டுப்படுத்தவும் பூஜை செய்பவா் பற்றிய விவரம் வழங்கவும், ஊா்வல அமைப்பாளரே பொறுப்பேற்க வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்தில் சிலைகள் பற்றிய தகவல் மற்றும் பாதுகாப்பு குழுவினரின் விவரம், பணிநேரம் ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும். மின்விளக்கு வசதிகள் செய்திருக்க வேண்டும். விநாயகா் சிலை ஊா்வல நாளில், மிகச் சரியாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா். திருவாரூா் பகுதியில் விநாயகா் சிலைகள் வைக்கவுள்ள இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க