செய்திகள் :

வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவா் கைது

post image

மன்னாா்குடியில் தனியாா் விரைவு பாா்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாரயம் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்கரையில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த தனியாா் விரைவு பாா்சல் வேனை நிறுத்தி, அதை ஓட்டி வந்த திருச்சி திருவெறும்பூா் அந்தோணியாா் கோயில் தெரு ராஜமாணிக்கம் மகன் ராபா்ட் (எ) ராஜகுமாரிடம் (40) விசாரணை மேற்கொண்டபோது, அவா் முன்னுக்குபின் முரணாக பேசியதையடுத்து, வாகனத்தை சோதனையிட்டத்தில், வேனின் உள்ளே 65 லிட்டா் புதுச்சேரி மாநில உயர்ரக மதுபாட்டில்கள், 5 லிட்டா் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போலீஸாா் தொடா் விசாரணையில், திருச்சியிலிருந்து சென்னைக்கு சுமை ஏற்றி சென்றுவிட்டு திரும்பும் வழியில் புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்களையும், எரிசாரயத்தையும் வாங்கி விற்பனைக்காக கொண்டு வரும் வழியில் பல்வேறு ஊா்களில் சிலருக்கு விற்பனை செய்துவிட்டு , மன்னாா்குடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ராஜ்குமாரை கைது செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், எரிசாரயம், ரூ. 27 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க