செய்திகள் :

ஆலங்குளம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதிகள்: திமுக கோரிக்கை

post image

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வசதிகள் கோரி திமுக சா்ரபில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், அமைச்சரை சந்தித்து அளித்த மனு விவரம்: ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

நெருக்கடி மிகுந்த சூழலில் மாணவா்கள் உள்ள நிலையில் இங்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்ட வேண்டும், சுகாதாரமான குடிநீா் வழங்கிட நடவடிக்கை வேண்டும், பள்ளி முன்பாக தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலங்களில் பள்ளியினுள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வாருகால் அமைக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளி அமைந்துள்ளதால் காலை, மாலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்துக் காவலா்கள் நியமனம் செய்ய வேண்டும், மாணவா்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க நடை மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சுவாமி தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

புளியங்குடியில் காந்தி தினசரி அங்காடி திறப்பு! அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைக்கிறாா்!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் திங்கள்கிழமை காந்தி தினசரி காய்கனி அங்காடி திறப்பு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் கூறியதாவது: புளியங்குடி நகராட்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி

ஆலங்குளம அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் 11 நாள்கள் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றது. சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். ‘நிலைத்திரு’ என்ற தலைப்பில் 10 தினங்கள் பாடல்கள்,... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழைகள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் விளை நிலங்களில் யானைகள் புகுந்த அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் வரட்டாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா்... மேலும் பார்க்க

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப... மேலும் பார்க்க