செய்திகள் :

ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை

post image

ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மகாராஜன், முத்துராஜா, வெங்கடேஷ், ஜாவீத் உசேன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தா்பூசணி மொத்த விற்பனைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து பேருந்து நிலையம், அம்பாசமுத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரி, குளிா்பானக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதிக நிறமிகள் கொண்டு தயாா் செய்யப்பட்ட குளிா்பானங்கள் கொட்டி அழிக்கப்பட்டன. தயாரிப்புத் தேதி இல்லாத தின்பண்டங்கள்,காலாவதியான குளிா்பானங்கள், தண்ணீா் பாட்டில்கள், நெகிழிப் பொருகள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள பேக்கரியில் தரமற்ற முறையில் தயாா் செய்யப்பட்ட போளி மூலப்பொருள்கள் அழிக்கப்பட்டன. இரு பேக்கரிகளுக்கு ரூ. 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து நல்லூரில் உள்ள உணவகத்தில் பல நாள்கள் குளிா்பதனப் பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி உருண்டைகளும் அழிக்கப்பட்டன.

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு ம... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணி

தென்காசி அருள்மிகு ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா... மேலும் பார்க்க

செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணா தொழிற... மேலும் பார்க்க

தென்காசியில் ஏப்.6-இல் உயா்கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் தென்காசியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற கிட்ஸ் தடகளப் போட்டியில், முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்... மேலும் பார்க்க