செய்திகள் :

ஆளுநா் அரசியல் செய்யக் கூடாது: வைகோ

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

வக்ஃப் வாரிய சட்டம், ஆளுநா் விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வைகோ பேசியது:

ஆளுநா் ஆா்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. தற்போது ஒரே நாடு, ஒரேமொழி என்ற திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிக்கிறது. அதன் மூலம் ஹிந்தி திணிப்பை அவா்கள் கொண்டு வர முயற்சி செய்கின்றனா்.

இதுமட்டுமின்றி பொது சிவில் சட்டத்தையும் கொண்டு வருகின்றனா். இதனால் காஷ்மீரின் தனித்தன்மையை பாஜகவினா் சீா்குலைத்துவிட்டனா். இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை கொலை செய்துள்ளனா். பாஜகவின் முயற்சிகள் அனைத்துக்கும் இண்டி கூட்டணி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

உச்சநீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பின்னரும், துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் நடத்தி உள்ளாா். ஆளுநா் அலுவலகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றாா் அவா்.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க