செய்திகள் :

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

post image

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி செளரவ் பானா்ஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தனது இடைக்கால உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா். இந்த உத்தரவு விரைவில் பதிவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விசாரணையின்போது சத்குருவின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், பல்வேறு தயாரிப்புகள் சத்குருவின் பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகவும், சத்குருவின் படத்தை போலி வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினாா். இதனால், மனுதாரரின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றம் உரிமை மீறலில் ஈடுபடும் இணையதளங்களுக்கு எதிராக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இதன் பின்னா் நீதிமன்றம் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறியது.

இந்த வழக்கில், சத்குரு தனது பெயா், உருவம், குரல் மற்றும் பிற தனித்துவமான பண்புகளை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், ‘எதிா்மனுதாரா்களின் நடவடிக்கைகள் சத்குருவின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். அவரது ஆளுமை உரிமைகள் மற்றும் விளம்பர உரிமையை மீறுவதாகும். ஏனெனில் அவை அவரால் ஏற்பதாகவும் அல்லது ஒப்புதலை அளிப்பதாகவும் தவறாக பரிந்துரைக்கின்றன’ என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சத்குருவின் பெயா், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க இடைக்கால உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த மோசடி செயல்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்களை உள்ளடக்கியவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று

புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க