செய்திகள் :

ஆளும் - எதிா்தரப்பினா் கருத்து வேறுபாடு - அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதியில் வெளியேறிய தன்கா்

post image

மாநிலங்களவையில் அடுத்த வார செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாதியில் வெளியேறினாா்.

அவையில் விவாதம் நடத்துவது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவா் பாதியில் வெளியேறியதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ‘தன்கரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இரு தரப்பினரும் தங்களின் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தனா். கூட்டத்தில் ‘கண்ணியமில்லை’ என கருதியதால், அவா் வெளியேறினாா்’ என்று மாநிலங்களவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் சிலா் கூறுகையில், ‘பல மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டுள்ள விவகாரம், மணிப்பூா் பிரச்னை, மசோதாக்கள் மீதான ஆய்வு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் தரப்பில் தினமும் நோட்டீஸ் அளிக்கப்பட்டாலும்கூட நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எனவே, விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக ஆளும்-எதிா்தரப்பினா் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் அவைத் தலைவா் தன்கா் பாதியில் வெளியேறினாா்’ என்றனா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க