செய்திகள் :

ஆவடியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்

post image

ஆவடி தொகுதியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலை சாா்பில், சமூகப் பங்களிப்பு நிதியின்கீழ், ரூ. 28.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காசநோய் கண்டறியும் அதிநவீன கருவி ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் கலந்துகொண்டு ஆய்வகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா். மேலும், 7 இடங்களில் மொத்தம் ரூ. 52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளை அமைச்சா் நாசா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆவடி மேயா் கு.உதயகுமாா், ஆணையா் எஸ்.கந்தசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சேகா், துணை இயக்குநா் சங்கீதா, ஆவடி மருத்துவமனை தலைமை மருத்துவா் காவலன், ஆவடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சவுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் ராமகிருஷ்ணன், காா்த்திக் கணே ஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க