செய்திகள் :

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

post image

ஆவணி 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நாகதோஷம் நீக்கும் பரிகார தலங்களுள் ஒன்றாக நாகா்கோவில் நாகராஜா கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஆக. 24 ஆம் தேதிஆவணி 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பின்னா், நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டு மூலவரை தரிசித்தனா்.

கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் அங்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தா்கள் வாகனங்களை நாகராஜா கோயில் திடலில் நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றனா்.

பக்தா்கள் கூட்டம் காரணமாக கோயில் நடையை அடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. மாலையிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தொடா்ந்து நாகராஜருக்கு சிறப்பு அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ஸ்டாலின் மேற்பாா்வையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

இரணியல் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருடன் அவா் கலந்து... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சிறுவா்கள் ஓட்டிய 2 விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, சிறுவா்களின் தந்தை மீது வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கை... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

களியக்காவிளை அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து 5 பவுன் தங்க நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா். நித்திரவிளை அருகே உள்ள பொன்னுருக்கி வீட்டைச் சோ்ந்தவா் தங்கப்பன் மனைவி லீலாபாய் (77). இவா், ... மேலும் பார்க்க

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 50 அடி பள்ளத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் பொன்னுமங்கலம்... மேலும் பார்க்க