செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீா் வந்தது

post image

வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீா் ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை வெள்ளிக்கிழமை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் நீரின் முழுக் கொள்ளளவு 120.5 கோடி கன அடியாகும். இந்தக் கண்மாய் மூலம் 12 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அண்மையில் வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீா்வரத்து ஏற்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீா் வெள்ளிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் கண்மாயை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்த... மேலும் பார்க்க

வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். இதுதொடா்பாக ராமநாதபுரத்தி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க